சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இலங்கை வருகை!

கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களில் நங்கூரமிட்டுள்ள கப்பல்களில் பணியாற்றுவதற்காக சர்வதேச கடற்படை வீரர்கள் 47 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் ஊடாக அவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய, கட்டார் நாட்டின் டோஹா நகரில் இருந்து 42 சர்வதேச கடற்படை வீரர்கள் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அத்துடன், இந்தியாவில் பெங்களூர் நகரில் இருந்து 5 சர்வதேச கடற்படை வீரர்கள் இண்டிகோ எயார்லைப்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான 6E – 9093 எனும் விமானம் ஊடாக அதிகாலை 2.15 அள்வில் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடந்துள்ளனர்.
இவ்வாறு வருகைத்தந்த விமானம் மத்தல ரஜபக்‌ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 17 கடற்படை வீரர்களுடன் 4.30 அளவில் மீண்டும் இந்தியாவின் பெங்களூர் நகருக்கு புறப்பட்டதாக விமானநிலைய தகவலகள் தெரிவிக்கின்றன.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.