யாழில் போதைப்பொருட்கள் எரித்து அழிப்பு!!

யாழில் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பீடி கட்டுக்கள் உதவி மதுவரி ஆணையாளரின் பணிப்புரைக்கிணங்க இன்று எரித்து அழிக்கப்பட்டுள்ளது.

கடந்த 26 ஆம் திகதி இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடிக்கட்டுகள் வடமராட்சி கிழக்கு மணல் காட்டுப்பகுதியில் மதுவரித் திணைக்களத்தினரால் கைப்பற்றப்பட்டது.
இதன் போது இரண்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு புகையிலை வரி சட்டத்தின் கீழ் 02 இலட்சம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட 1 இலட்சத்து 32 ஆயிரம் பீடிகள் இன்றையதினம் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்கள பொறுப்பதிகாரி பி.ரகுநாதன், மதுவரி அத்தியட்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.