கொரோனா அபாய வலயத்தில் யாழ் மாவட்டமும் அடக்கம்!

இலங்கையில் 16 மாவட்டங்களில் கொரோனா அபாயம் காணப்படும் நிலையில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் குறித்த 16 மாவட்டங்களில் யாழ்.மாவட்டமும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில் கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் பணியாற்றிய ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பைப் பேணிய நபர்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
"கம்பஹா, பொலன்னறுவை, காலி, கொழும்பு, இரத்தினபுரி, குருநாகல், களுத்துறை, கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கேகாலை, மொனராகலை, அம்பாந்தோட்டை, புத்தளம், மாத்தறை மற்றும் மாத்தளை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில், கொனஹேன, கொடிகமுவ, உடுமுல்ல, இரத்மலானை, ஒருகொடவத்தை, மெத்தேகொடை, கெஸ்பேவ, கொஹுவல, ராவத்தவத்த, கொழும்பு 05,08,09,10,13 மற்றும் 15, கிராண்ட்பாஸ், உஸ்வட்டகெட்டியாவ ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலே குறிப்பிடப்பட்ட 16 மாவட்டங்களில் வசிக்கும் பொதுமக்களை சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க செயல்படுமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.