இரண்டாவது கொரோனா அலை எச்சரிக்கை ஜேர்மனியில்!!

ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனிய சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார்.
கொரோனா இன்னமும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொணடுவரப்படாத நிலையில், கடற்கரை ஒன்றில் கூட்டம் கூட்டமாக ஜேர்மனியர் கூடி பார்ட்டிகள் கொண்டாடும் புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
ஐரோப்பிய ஒன்றியம் எல்லைகள் திறந்ததும் ஜேர்மனியர்கள் அதிகம் விரும்பும் கடற்கரையான ஸ்பெயினிலுள்ள Mallorca கடற்கரையில் பார்ட்டிகளுக்காக கூட்டம் கூட்டமாக கூடும் புகைப்படங்களே இவ்வாறு வெளியாகியுள்ளன.
இந்தநிலையில் ஜேர்மனியில் இரண்டாவது கொரோனா அலை உருவாகக் கூடும் என ஜேர்மனிய சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தயவு கூர்ந்து மீண்டும் கொரோனா தோற்றுக்கள் அதிகமாவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் மக்களிடம் கோரியுள்ளார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.