நிந்தவூர் கடலில் கரை வலையில் சிக்கிய இராட்சத மீன்!

நிந்தவூர் நான்காம் பிரிவுக்குட்பட்ட பிரதேச கடலில் இன்று காலை கரைவலை இராட்சத சுறா இன மீன் ஒன்று சிக்கியுள்ளது.

இம்மீன் சுமார் 15அடி, நீளமும், 2 டன், இடையும் கொண்டதாகவும் கரைவலை மீனவர்கள் கூறுகின்றனர்.
மேலும் இம்மீனின் பெயர் "கொடுப்புளி சுறா"இன மீன் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கரை வலையை இழுத்து கரைக்கு கிட்டத்தட்ட வரும் முன்பேதான் இம்மீனைக் மீனவர்கள் கண்டதாகவும் வலையில் சிக்கியதால் மீனவர்களால் இழுக்க முடியாமல் உழவு இயந்திரத்தின் உதவியைக் கொண்டு கட்டி இழுத்துள்ளனர்.
இதன் போது சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற கடல் தொழில் மீன்பிடி அதிகார சபை அதிகாரிகள் அவ்விடத்திற்கு விரைந்து சென்றதுடன் குறித்த மீனை வலையில் இருந்து கழட்டி மீண்டும் கடலில் விடுமாறு உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.