பெல்ஜியத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுகிறது!!

கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவல் காரணமாக, பெல்ஜியம் சமூகக் கூட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது.

நாளை (புதன்கிழமை) முதல் குடியிருப்பாளர்கள் தங்கள் குடும்பங்களுக்கு வெளியே அதிகபட்சம் ஐந்து பேரைக் காண அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், பொது வெளியில் கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பெல்ஜியம் பாதியாக்கியுள்ளது. உள்ளே 100பேரும் வெளியே 200பேரும் ஒன்று கூடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் மிக உயர்ந்த தொற்று வீதத்தை பெல்ஜியம் கொண்டுள்ளது. அத்துடன் தற்போது அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் நாட்டில் தினமும் சராசரியாக 279பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர். இது வாரத்திற்கு ஒரு நாளைக்கு 163ஆக இருந்தது.

பெல்ஜியத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 66,428பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 9,822பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.