மத்திய வங்கி கடன் வழங்க ஒப்புதல்!!

கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்ட 20 ஆயிரத்து 240 வியாபாரங்களுக்கென 53 பில்லியன் ரூபாவுக்கான கடன் திட்டதிற்கு மத்திய வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

4 சதவீத வட்டி வீதத்தில் தொழிற்பாட்டு மூலதனத்தினை வழங்குவதற்காக சௌபாக்யா கொவிட்-19 மறுமலர்ச்சிக் கடன் திட்டத்தினை அறிமுகப்படுத்தி நாட்டில் பொருளாதார நடவடிக்கை புத்துயிர் பெறுவதற்கு மத்திய வங்கி ஆதரவளிக்கின்றது.
இந்தக் கடன் திட்டமானது சுயதொழில் மற்றும் தனிப்பட்டவர்கள் உள்ளடங்கலாக ஒரு பில்லியன் ரூபாவுக்கு குறைவான வருடாந்த புரள்வுடன் கூடிய, கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது.
1 பில்லியன் வருடாந்த புரள்வு மட்டுப்பாடானது சுற்றுலா, ஏற்றுமதிகள் மற்றும் தொடர்புபட்ட ஏற்பாட்டுச்சேவை வழங்குதல் போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வியாபாரங்களுக்கு ஏற்புடையதாகாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.