பெரமுன மகத்தான வெற்றியடையும் -பிரசன்ன!!

ஜனாதிபதியின் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், கம்பஹாவில் பொதுஜன பெரமுன 13 இடங்களை கைப்பற்றி ஒரு மகத்தான வெற்றியைப் பெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் பாதாள உலகக் கும்பலை ஒழிப்பதற்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கும் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் முயற்சிகளுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தின் மூலம், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இல்லாமல் ஆக்கப்பட்டமையினால் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதிக்கு சாதகமாக நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சி தற்போது பிளவுபட்டிருந்தாலும், ஓகஸ்ட் 5 ஆம் திகதி பொதுமக்கள் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தைப் பெற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு உதவ வேண்டும் என்றும் பிரசன்ன ரணதுங்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தேர்தல் தளங்களில் நம்பத்தகாத வாக்குறுதிகளை அளித்து ஐக்கிய தேசியக் கட்சியும் மற்றும் பிற எதிர்க்கட்சிகளும் பொதுமக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றன என்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சாட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.