கல்வித்துறை மாற்றம் குறித்து அனுர கருத்து!!

கல்வியில் புரட்சிகரமான மாற்றங்களை மேற்கொண்டால் இலங்கை விரைவான வளர்ச்சியை அடையும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், தனியார் வகுப்புகளை நம்பியிருக்கும் பாடசாலை முறையை மாற்றவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

அபிவிருத்திக்காக பயன்படுத்தக்கூடிய மனித வளங்கள் நாட்டில் உள்ளன என தெரிவித்த அநுரகுமார திஸாநாயக்க பொருளாதார அபிவிருத்தியின்றி நாடு முன்னோக்கி நகரமுடியாது என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு செய்தல் மட்டுமே நாட்டினையும் நாட்டின் வளங்களையும் பாதுகாக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கான திட்டங்களை முன்வைத்து அதனை செயற்படுத்தாமல் அரசியல்வாதிகள் தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.