யாழில் இளைஞர்களுடன் உதைப்பந்தாடிய சஜித்📷

யாழ்ப்பாணம் நெல்லியடி இராஜ கிராமத்தில் உள்ள கரவை சுடர் உதைபந்தாட்ட வீரர்களுடன் இணைந்து சஜித் பிரேமதாச கால்பந்தாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.


வடக்கிற்கு நேற்றையதினம் பிரசார நோக்கில் விஜயம் செய்த இவர் தனது உதைபந்தாட்ட திறமையை காண்பித்துள்ளார்.

இதேவேளை மறைந்த ஜனாதிபதி பிரேமதாசவினால் கட்டிக் கொடுக்கப்பட்ட 85 வீட்டுத் திட்டங்களின் நினைவு கல்லினையும் இன்று தந்தையின் நினைவாக திரைநீக்கம் செய்து வைத்துள்ளார்.

தொடர்ந்து இராஜ கிராம மக்களை சந்தித்து மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்

Blogger இயக்குவது.