இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம் 📷

கொரோனா தொற்று காரணமாக கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகளின் கல்வி  கல்வி செயற்பாடுகள் இன்று (6) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கடந்த மாதம் 29ம் திகதி முதற் கட்டமாக அதிபர், ஆசிரியர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்பட்டு கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றது.

இன்று  இரண்டாம் கட்டமாக தரம் 5, தரம் 11 , தரம் 13ம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மூன்றாம் கட்டம் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 12 மற்றும் 10 ஆம் தர மாணவர்களுக்கும்,

நான்காவது கட்டத்தில் ஜூலை 27 ஆம் திகதி 3 ஆம் தர, 4 ஆம் தர, 6 ஆம் தர, 7 ஆம் தர, 8 ஆம் தர மற்றும் 9 ஆம் தர மாணவர்களுக்கும்.

 அனைத்து முன்பள்ளிகளும், பாடசாலைகளில் முதலாம், இரண்டாம் தரங்களினதும் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி  முதலும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

சுகாதார வழிகாட்டுதலுக்கு அமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் இன்று கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
Blogger இயக்குவது.