சிரியாவில் இடம்பெறும் நாடாளுமன்றத் தேர்தல்!

சிரியாவில் தொடர்ச்சியான போர் மற்றும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இதன்படி, 15 தொகுதிகளில் நாடாளுமன்றத்தின் 250 ஆசனங்களுக்காக சுமார் 2,100 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக அதிகாரபூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரலில் நடைபெறவிருந்த தேர்தல் கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக இருமுறை பிற்போடப்பட்ட நிலையில் இன்று தேர்தல் இடம்பெறுகிறது.
இந்த வாக்கெடுப்பு, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் முதன்முறையாக முன்னாள் எதிர்க் கட்சிகளின் கோட்டைகள் உட்பட டமாஸ்கஸில் அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகளிலும் நடைபெறுகிறது.
அந்தவகையில் அல்-ஹசாகா, இட்லிப் மற்றும் அல்-ரக்கா மாகாணங்களில் உள்ள பகுதிகளும் அடங்குகின்றன.
2011இல் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான ஜனநாயக சார்பு போராட்டம் மூன்று இலட்சத்து 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களைக் கொன்ற உள்நாட்டுப் போரைத் தூண்டியது. இந்நிலையில், இந்த போரின் பின்னரான மூன்றாவது நாடாளுமன்றத் தேர்தலாக இது பதிவாகியுள்ளது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.