தவறி விழுந்த 18 மாத பச்சிளம் குழந்தை பரிதாப பலி!

கையில் இருந்து தவறி விழுந்த 18 மாத குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

திருகோணமலையிலிருந்து கண்டி பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு உயிரிழந்த 18 மாத குழந்தை கிண்ணியா – சூரங்கல் பகுதியைச் சேர்ந்த பாத்திமா நசீமா எனவும் தெரியவருகின்றது.
இச்சம்பவம் கிண்ணியா பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
குழந்தை கதிரையில் உட்கார்ந்திருந்தபோது தன்னுடைய 12 வயது அக்கா தூக்கி கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக கீழே விழுந்து மயக்கமுற்றது.
இந் நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டது.
இதையடுத்து கண்டி போதனா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொண்டு சென்றபோது குழந்தை உயிரிழந்துள்ளது.
மேலும் உயிரிழந்த குழந்தையின் சடலம் கந்தளாய் அரசினர் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.