கட்டாயமாக்கப்பட்டுள்ளது இலங்கையில் முகக்கவசம்!!

நாத்தாண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முகக் கவசம் அணியாமல் பயணித்த 10 பேருக்கு எதிராக மாரவில மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாத்தாண்டிய – கொட்டாரமுல்ல பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான இளைஞர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 25 வயதுடைய அவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் ஆலோசகராக செயற்பட்டுள்ளார்.
அவர் அடையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் மகன் கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பிரதேசத்தில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 47 பேர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய ஆபத்தான நிலையில் அந்தப் பகுதியிலுள்ள அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார பரிசோதகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அதனை கருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அணியாமல் பயணித்த நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய 10 பேர் செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.