நித்திரைக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!!
வவுனியா, வேப்பங்குளம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, வேப்பங்குளம் 6ம் ஒழுங்கைக்கு அண்மித்த பகுதியிலிலுள்ள வீடொன்றில் இருந்தே இன்று காலை குறித்த சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்டுள்ளனர்.
27வயதுடைய ராஜேந்திரன் விமலராஜ் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் இரவு நித்திரைக்கு சென்ற இளைஞனை காலை தயார் எழுப்பிய சமயத்தில் இளைஞன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் இளைஞரின் மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo