பெண்கள் விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி - வவுனியாவில் சம்பவம்!!

வவுனியா – கோவில்குளம் பகுதியில் உள்ள அகிலாண்டேஸ்வரி அருளக பெண்கள் விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவியை நீண்ட நேரம் காணாத நிலையில் இல்லத்தில் இருந்தவர்கள் அவரை தேடியுள்ளனர்.
அப்போது , விடுதியின் முதலாவது மாடியில் அமைந்துள்ள கழிவறையில் குறித்தபெண் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வவுனியா தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி மானவடு தலைமையிலான குழுவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவத்தில் ராயி செல்வராணி என்ற (17 – வயது) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி வவுனியா கோவில் புதுக்குளம் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்றுவருவதுடன், இவ்வருடம் இடம்பெறவிருந்த க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.