இடம்பெயர்ந்தோர் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் அமைக்க நடவடிக்கை!

இம்முறை தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 6 ஆயிரத்து 275 பேர் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் என வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

அவர்கள் வாக்களிப்பதற்காக 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளதாகவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியின் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.அதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே சமன் பந்துலசேன இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

1981 இலக்கம் 1 நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் 127 அ ஷரத்திற்கு அமைய தேர்தலில் வாக்களிக்க தேர்தல் ஆணையாளரிடம் விண்ணப்பித்த இடம்பெயர்ந்த வாக்காளர்களில் 6 ஆயிரத்து 275 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5 ஆயிரத்து 804 பேர் மன்னார் மாவட்டத்தையும் 463 பேர் வவுனியா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள். இவர்கள் வாக்களிக்க 12 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.