பெண்ணொருவர் வவுனியாவில் கைது!!

போதைப்பொருட்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வவுனியாவில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் வவுனியா மடுகந்தைவிசேட அதிரடிபடையினருக்கு கிடைத்த தகவலிற்கமைய , நேற்றயதினம் இரவு வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சோதனைகளை மேற்கொண்ட விசேடஅதிரடிபடையினர் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த 25 வயது பெண் ஒருவரை கைதுசெய்துள்ளனர்.

அவரிடம் இருந்து ஒருகிலோ 5 கிராம் கேரளாகஞ்சாவும், 2 கிராம்60 மில்லிகிராம் கெரோயின் போதைப்பொருளும்பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன்,
கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடதக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.