கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்கு விசேட கொடுப்பனவு வழங்க நடவடிக்கை!
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் கற்கும் மாணவர்களுக்கு கொடுப்பனவொன்றை வழங்க கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
கொரோனா காலப்பகுதியில் அவர்கள் வீடுகளில் இருக்கும் காலப்பகுதியிலேயே இந்த கொடுப்பனவு வழங்கப்படுவதாக கல்வியமைச்சு கூறுகின்றது.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம். ஆண்டு மாணவர்கள். தமது கல்வியியல் டிப்ளோமாக்களை நிறைவு செய்வதற்கு எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி வரை இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அத்துடன் கல்லூரி மூடப்பட்டிருந்த மூன்று மாத காலப்பகுதியில் 16 ஆயிரத்து 200 மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்க 242 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo