அதிக துருப்புக்களை டார்பூர் பகுதிக்கு அனுப்ப சூடான் திட்டம்!

அண்மையில் வன்முறை அதிகரித்ததைத் தொடர்ந்து சூடான் அதிக துருப்புக்களை டார்பூர் பகுதிக்கு அனுப்பும் என்று பிரதமர் அப்தல்லா ஹம்டோக் தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் 60க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தனர். அதற்கு முந்தைய நாள் 20 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

மேலும், பல கிராமங்கள் எரிக்கப்பட்டன. சந்தைகள் மற்றும் கடைகள் சூறையாடப்பட்டன என்று மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா. அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.

எனினும், எந்தவொரு குழுவும் இதுவரை தாக்குதல்களுக்கு பொறுப்பேற்கவில்லை.

இந்தநிலையில், விவசாய பருவத்தில் மக்களைப் பாதுகாப்பதற்காக படைகளை அனுப்பவுள்ளதாக பிரதமர் அப்தல்லா ஹம்டோக் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு தூக்கியெறியப்பட்ட ஜனாதிபதி ஒமர் அல்-பஷீருக்கு விசுவாசமான கிளர்ச்சியாளர்களுக்கும் படைகளுக்கும் இடையிலான சண்டையால் டார்பூர் கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களாக மோதலால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களால், சுமார் 300,000 மக்கள் இறந்துவிட்டதாகவும், இரண்டு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.