வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் திடீர் சோதனை!!

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 400கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 19 கையடக்க தொலைபேசிகளும் 9 சிம் அட்டைகளும் மீட்கப்பிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.

இதுதொடர்பாக சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் திடீர் சுற்றிவலைப்பொன்று நேற்று மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் சிறைச்சாலையின் வை விடுதியிலே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த விடுதியில் சுமார் 70 சிறைக்கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

புலனாய்வு பிரிவுக்கு இணைக்கப்பட்ட பெண் அதிகாரிகளே சுற்றிவலைப்பை மேற்கொண்டனர்.

அத்துடன் அவற்றுடன் கையடக்க தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் 165 பெட்டறிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலையில் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது ஆயிரத்துக்கும் அதிக கையடக்க தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் பல சட்டவிரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.