தற்காலிகமாக மூடப்படுகிறது முந்தல் வைத்தியசாலை!

முந்தல் வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


குறித்த வைத்தியசாலையில் காய்ச்சலுக்காக சிகிச்சைப் பெற்று வந்த இளைஞன் திடீரென உயிரிழந்துள்ளார்.

மேலும் உயிரிழந்த இளைஞனுக்கு பீ.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அதன் அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக இளைஞனின் பீ.சி.ஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை குறித்த வைத்தியசாலையை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Blogger இயக்குவது.