மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகுந்த சமூக ஆர்வலர்களை கைது செய்ய ஹொங்கொங் முயற்சி!
இந்த குழுவில் முன்னாள் பிரித்தானிய தூதரக தொழிலாளி சைமன் செங், பிரபல ஆர்வலர் நாதன் லோ மற்றும் அமெரிக்க குடிமகன் சாமுவேல் சூ ஆகியோர் அடங்குவதாக கூறப்படுகிறது.
பெய்ஜிங்கால் ஹொங்கொங்கில் விதிக்கப்பட்ட புதிய பாதுகாப்புச் சட்டத்தை மீறிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் தேடப்படுகிறார்கள்.
இவர்களை ‘பிரச்சனையாளர்கள்’ என சீன அரசு தொலைக்காட்சி விபரித்துள்ளது. எனினும், இதுகுறித்து கருத்து தெரிவிக்க ஹொங்கொங் பொலிஸார் மறுத்துவிட்டனர்.
செப்டம்பர் மாதம் திட்டமிடப்பட்ட சட்டமன்றத் தேர்தல்கள் ஹொங்கொங் அரசாங்கத்தால் ஒரு வருடம் தாமதமாகிவிட்டதை அடுத்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.
புதிதாக ஹொங்கொங்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள தேசிய பாதுகாப்புச் சட்டத்தால் தங்களது உயிருக்கு ஆபத்து வருமென கருதி ஏராளமான சமூகநல ஆர்வலர்கள் மேற்கத்திய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை