கொழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள கோடீஸ்வர யாசகர்
கொழும்பில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட யாகசர் கோடீஸ்வரர் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மஹரகம பமுனுவ பகுதியை சேர்ந்த 64 வயதான நபர் கொட்டாஞ்சேனை , கொச்சிக்கடை ஆலயத்திற்கு அருகில் யாசகம் எடுத்தபோது கைது செய்யப்பட்டார் .
குறித்த நபருக்கு இரண்டு மாடியில் சொகுசு பங்களா மற்றும் மூன்று ஆடம்பர கார்களான வேகன் ஆர் மோட்டார் வாகனம் ஒன்றும் மேலும் இரண்டு சொகுசு மோட்டார்
(Wagonr hybrid car and another luxury car) உள்ளமை பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட யாசகர் தனது வீட்டின் மேல் மாடியை மாதம் 30 ஆயிரம் ரூபாவுக்கு மாதாந்த வாடகை அடிப்படையில் வழங்கியுள்ளார் . யாசகம் எடுப்பதன் மூலம் தினமும் 5000 ரூபா பணம் அவர் சம்பாதிப்பதாக பொலிஸ் விசாரைணையில் தெரியவந்துள்ளது .
கொழும்பு ஜம்பட்டா வீதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் , குறித்த யாசகர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார் . இதன்போது மேற்கொண்ட விசாரணைகளில் அவர் கோடீஸ்வரர் என்ற விபரங்கள் தெரிய வந்துள்ளது .
கருத்துகள் இல்லை