சாவகச்சேரி நுணாவில் பகுதியில் கண்ணிடி வெடி மீட்ப்பு!
டாங்கிகளை தகர்க்கக்கூடய குண்டு ஒன்று நுணாவில் சாவகச்சேரி பகுதியில் 27/8/2020 வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வீட்டு வளவொன்றில் குழி ஒன்றை வெட்ட முற்பட்ட போது சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று இருப்பதை அவதானித்த சாவகச்சேரி காவல் துறை நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக குறித்த பகுதியை காவல் துறை கண்காணிப்பதுடன் போராட்ட காலத்தில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வெடிக்காத நிலையில் இருக்கும் குண்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரி காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை