பாலிஸ்டிக்- கப்பல் ஏவுகணைகளை அறிமுகப்படுத்தியது ஈரான்!
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே கடுமையான மோதல் நிலவுகின்ற நிலையில், ஈரான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பாலிஸ்டிக் மற்றும் கப்பல் ஏவுகணைகளை காட்சிப்படுத்தியுள்ளது.
‘ஸ்னாப் பேக்’ நடைமுறை என்று அழைக்கப்படும் ஈரான் மீதான ஐ.நா. பொருளாதாரத் தடைகளை மீண்டும் செயற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சர்ச்சைக்குரிய பொறிமுறையை செயற்படுத்தப்போவதாக வொஷிங்டன் கூறிய ஒரு நாள் கழித்து இந்த ஏவுகணைகளை ஈரான் காட்சிப்படுத்தியது.
ஈரானில் தேசிய பாதுகாப்பு தொழில் தினமான நேற்று (வியாழக்கிழமை) இரண்டு புதிய ஏவுகணைகளை அதிகாரிகள் அறிமுகப்படுத்தியதாக அரசு நடத்தும் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலின் போது, பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே கொல்லப்பட்ட ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குட்ஸ் படைப்பிரிவுத் தளபதி காஸ்ஸெம் சோலேமானீஈராக் போராளித் தலைவர் அபு மஹ்தி அல் முஹாண்டிஸ் ஆகியோரின் பெயர் இந்த இரு ஏவுகணைகளுக்கும் வைக்கப்பட்டுள்ளது.
நிலத்திலிருந்து செல்லக்கூடிய ‘தியாகி ஹஜ் காசிம்’ பாலிஸ்டிக் ஏவுகணை 1,400 கிமீ (600 மைல்) தொலைவுக்கு சென்று தாக்கக் கூடிய வல்லமை படைத்தது.
கடலிலிருந்து செலுத்தக்கூடிய ‘தியாகி ஹஜ் மக்தி’ ஏவுகணை 1,000 கிமீ (400 மைல்) தூரத்தை தாக்கும் திறன் கொண்டது.
மேலும், இவற்றுடன் ஈரானில் தயாரிக்கப்பட்ட இரட்டை இருக்கைகள் கொண்ட கோவர் போர் விமானத்திற்கான ஓவ் என்ஜினையும் ஈரான் ராணுவம் அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி கூறுகையில், ‘இரண்டு வருடங்களுக்குள் நாங்கள் 300 கி.மீ முதல் 1,000 கி.மீ வரை உயர்த்தியுள்ளோம் என்பது ஒரு பெரிய சாதனை’ என கூறினார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை