சர்வதேச மருத்துவ நிபுணர்களால் பாடகர் எஸ்.பி.பிக்கு சிகிச்சை!

 

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்களுடன், உள்நாட்டு மருத்துவர்களும் இணைந்து சிகிச்சையளித்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அவரின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5ஆம் திகதி எம்.ஜி.எம். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், எஸ்.பி.பி. மீண்டுவர வேண்டும் என இரசிகர்கள், இசைப் பிரியர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துவருகின்றனர். அத்துடன், எஸ்.பி.பி. குணமடைந்துவர வேண்டுமென சபரிமலை ஐயப்பன் கோயிலில் விசேட பூசை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.