யாழ். கொழும்புத்துறை பகுதியில் வாள் வெட்டு!

 

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் கும்பல் ஒன்று வீதியால் சென்ற இளைஞனை வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது.

கொழும்புத்துறை பகுதியில் இன்றைய தினம் மாலை 4 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த கவிசந்திரன் சிவனேஸ்வரன் (வயது 25) எனும் இளைஞனே காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் அவ்வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை பின் தொடர்ந்து இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இளைஞனை வழி மறித்து வாளினால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

பழைய பகையை தீர்க்கும் முகமாகவே  குறித்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்று உள்ளது என பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து .

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.