இன்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு!!

 

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, ஜூலை மாதத்தை தொடர்ந்து ஓகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது.

இதற்கமைய இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைக்கு வந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.

அதாவது பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரச வாகனங்கள் தவிர, பிற அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.