லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்தும் இந்தியா!!

 

ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்துவது குறித்து இந்தியா திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா- சீனா இராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்ட லடாக் எல்லையில் ரபேல் விமானங்களை நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைத் தலைவர் பிபின் ராவத், முப்படைத் தளபதிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன்  நேற்று (சனிக்கிழமை) ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார்.

குறித்த ஆலோசனைக் கூட்டத்திலேயே ரபேல் விமானங்களை லடாக் எல்லையில் நிறுத்துவது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த மாதம் 6ஆம் திகதி முதல் அங்கு படை விலக்கும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே சீனா தனது படைகளை திரும்ப பெற்றது.

ஆனால் பங்கோங்சோ, தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் சீன படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. இது இந்தியாவுக்கு அதிருப்தியை கொடுத்து உள்ளது.

எனவே அங்கு படை விலக்கும் நடவடிக்கைகளை விரைவில் முடித்து, கடந்த ஏப்ரல் மாதம் வரை நிலவிய சூழலை எல்லை முழுவதும் திரும்ப கொண்டு வர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையிலேயே  லடாக் எல்லை நிலவரம் குறித்து ராஜ்நாத் சிங், ஆய்வு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.