மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மனோவின் அறிவிப்பு!!
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் எந்தெந்த மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடவுள்ளதென்ற அறிவிப்பை அதன் தலைவர் மனோ கணேசன் வெளியிட்டுள்ளார்.
அதற்கமைய நுவரெலியா, கொழும்பு, கண்டி, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, மாத்தளை, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒவ்வொரு மாவட்டங்களின் களநிலைமைகளையும் தனித்தனியாக ஆராய்ந்து, தனித்தோ அல்லது, ஐக்கிய மக்கள் சக்தியில் கூட்டணியாகவோ அல்லது வேறு நட்பு கட்சிகளுடன் கூட்டாகவோ தமிழ் முற்போக்கு கூட்டணி களமிறங்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள அனைத்து மாகாணங்களுக்குமான ஆட்சி காலம் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை