மேலும் பலர் வெளிநாடுகளிலிருந்து நாட்டுக்கு வந்தனர்!!

 

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் பலர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதற்கமைய அவர்கள் அனைவரும் இன்று (வியாழக்கிழமை) காலை கட்டுநாயக்க மற்றும் மத்தளை விமான நிலையங்களை வந்தடைந்தனர்.

குவைட் , ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் இந்தியாவில் தங்கியிருந்த இலங்கையர்கள் 745 பேரே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி கட்டார், டோஹாவிலிருந்து 20 இலங்கையர்கள் அதிகாலை 1.31 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் சென்னையிலிருந்து 290 இலங்கையர்கள் அதிகாலை 5.08 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதேபோல குவைத்திலிருந்து 266 இலங்கையர்கள் அதிகாலை 4.22 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து 169 இலங்கையர்கள் மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவருக்கும் விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் அவர்கள் அனைவரையும் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.