அமெரிக்க துருப்புகளை போலந்தில் நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது!

 

ஜேர்மனியிலிருந்து வெளியேறிய அமெரிக்க துருப்புகளை போலந்தில் நிலைநிறுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பொம்பியோ மற்றும் போலந்தின் வெளியுறவு அமைச்சர் ஜேசெக் ஸாபுடோவிச் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜேசெக் ஸாபுடோவிச், ‘போலந்தில் அமெரிக்க துருப்புக்கள் இருப்பது எங்கள் தடுப்பு திறனை மேம்படுத்துகிறது’ என கூறினார்.

போலந்தின் உயர்மட்ட தூதர் கூறுகையில், ‘துருப்புகள் ஜேர்மனியில் அல்ல, போலந்தில் நிறுத்தப்பட வேண்டியது அவசியம். இராணுவம் சரியான இடத்தில் நிறுத்தப்பட்டால் தடுப்புத் திறன் அதிகமாக இருக்கும்’ என கூறினார்.

கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட, ஜேர்மனியில் இருந்து சுமார் 12,000 அமெரிக்க துருப்புக்களை மீள அழைக்கும் ட்ரம்ப் நிர்வாக திட்டத்தின் ஒரு பகுதியாக போலந்திற்கான துருப்புகளின் இந்த அதிகரிப்பு அமையவுள்ளது. அவர்களில் 1,000பேர் ஏற்கனவே போலந்தில் உள்ள 4,500 அமெரிக்க துருப்புக்களில் சேருவார்கள்

மற்றவர்கள் பெல்ஜியம் அல்லது இத்தாலி அல்லது அமெரிக்காவிற்கு திரும்பிச் செல்வார்கள். ஐரோப்பா அல்லது பிற உலகின் அமெரிக்க இராணுவ தளங்களுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.