உறவுகளை வரவேற்கத் தயாராகும் வேல்ஸ் மக்கள்!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்க நிலை கட்டுப்பாடுகள் எளிதாக்கப்படுவதால், வேல்ஸில் உள்ள மக்கள் இப்போது அதிகமான குடும்பத்தினரையும் நண்பர்களையும் தங்கள் வீடுகளுக்குள் வரவேற்க முடிகிறது.
இன்று (சனிக்கிழமை) முதல் நான்கு வீடுகளில் உள்ளவர்கள் வரை ஒன்றாக சேர அனுமதிக்கப்படுகின்றனர்.
இதனால் சிலர் மகிழ்ச்சியடைகிறார்கள். ஆனால் மற்றவர்கள் தங்கள் கதவுகளை மற்றவர்களுக்குத் திறப்பதில் எச்சரிக்கையாக இருக்கிறார்கள்.
முன்னர், இரண்டு வீடுகளில் உள்ளவர்கள் மட்டுமே ஒன்று கூட முடியும் என்றிருந்த நிலையில், அது தற்போது இரட்டிப்பாகியுள்ளது.
அத்துடன் திருமணம், ஒரே பாலின திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஆகியவற்றுக்கு வீட்டுக்குள்ளேயே 30பேர் வரை அனுமதிக்கப்படுவர்.
மேலும், பராமரிப்பு இல்லங்களுக்கான உட்புற வருகைகள் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை