அமெரிக்கத் தூதுவர் திருமலையில் சம்பந்தனைச் சந்திக்கிறார்!!

 


திருகோணமலைக்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் அம்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

திருகோணமலை கூனித்தீவில் உள்ள பாடசாலைக் கட்டட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கலந்துகொள்கின்றார். இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்லத்தும் பங்கேற்கவுள்ளார்.

இந்த திறப்பு விழாவைத் தொடர்ந்து, கிழக்கு மாகாண ஆளுநர் உள்ளிட்டவர்களுடன் சந்திப்பொன்றை நடத்தவுள்ள அமெரிக்க தூதுவர், அதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர், அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸுக்கும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் நடைபெறும் முதலாவது சந்திப்பு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.