தொழில் வழிகாட்டல்களை மாணவர்களுக்கு கட்டாயமாக்க தீர்மானம்!!


 பாடசாலைகளில் 6ஆம் தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்களை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனூடாக பாடசாலை கல்வியை பெறும் போதே தொழில்துறைக்கான பயிற்சியில் மாணவர்களை ஈடுபடுத்த முடியும் என கல்வி மறுசீரமைப்பு மற்றும் தொலைதூரக்கல்வி தொடர்பான இராஜாங்க அமைச்சின் செயலாளர் கலாநிதி உபாலி சேதர குறிப்பிட்டார்.

புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பாடசாலைகளில் ஆலோசனை முறையை கட்டாயமாக்குவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மாணவர்களிடையே காணப்படக்கூடிய உளநல மற்றும் சமூக சிக்கல்களுக்கு இதனூடாக தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.