சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு!!

 


ஓணம் பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை திறக்கப்படுவதுடன் தொடர்ந்து 5 நாட்களுக்கு சிறப்பு பூசைகள் நடைபெறவுள்ளன.

எனினும், கொரோனா நெருக்கடி காரணமாக பக்தர்கள் தரிசனத்துக்கான தடை நீடிப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நாளில், சபரிமலை ஐயப்பன் கோவிலில்  சிறப்பு பூஜை நடைபெறுவது வழமை.

இதற்கமைய, இந்த வருடத்துக்கான ஓணம் பண்டிகையையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) உத்ராட சிறப்பு பூஜைகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, எதிர்வரும்  31ஆம் திகதி திருவோண தின சிறப்பு வழிபாடு,  1ஆம் திகதி அவிட்டம் நாள் சிறப்பு பூஜை,  2 ஆம் திகதி சதயம் நாள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.  5 நாள் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பின்னர் மீண்டும் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை  எதிர்வரும் 16ஆம் திகதி, மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு  21 ஆம் திகதி வரை புரட்டாசி மாத பூஜை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.