மக்களின் பதிலடியால் விரட்டப்பட்ட சுமா!!

நடந்து முடிந்த சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தலில் யாழ்மாவட்டதில் சுமந்திரன் தோல்வியடைந்திருப்பதாக செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

நாங்கள் தும்புத்தடியை நிறுத்தினால் மக்கள் அதற்கும் வாக்களிப்பார்கள் எனும் மமதையோடு இருந்த கூட்டமைப்பிற்கும் தங்கள் வாக்குகளால் மக்கள் பதிலளித்திருக்கிறார்கள்.

தங்கள் பணப்பெட்டிகளை நிரப்புவதை சாணக்கியம் என்றும்  இணக்க அரசியல் என்றும் கூறி கூட்டமைப்பு தமிழ் மக்களை  இதுவரை காலம் ஏமாற்றி வந்தது.

கூட்டமைப்பிற்குள் தேசியப்பட்டிலூடாக கொண்டு வரப்பட்ட சுமந்திரன் இன்று கூட்டமைப்பையே இருந்த இடமில்லாமல் செய்திருக்கிறார்.

சுமந்திரனால் பகடைக்காயாக கொண்டு வரப்பட்ட சசிகலா ரவிராஜ் விருப்பு வாக்கில் முன்னணியில் இருப்பதுடன் விருப்பு வாக்குகளில் மோசடி செய்து அந்த இடத்தை கைப்பற்றுவதற்கு சுமந்திரன் தரப்பு முயல்வதாக தெரியவருவது குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.