சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது சுஷாந்த் சிங்கின் மரண வழக்கு!

பொலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புதின் மரணவிவகாரம் குறித்த வழக்கை விசாரணை செய்ய சி.பி.ஐக்கு  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த வழக்கு விசாரணையை மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொள்ள வேண்டும் என பீகார் அரசு விடுத்த கோரிக்கைக்கு இணங்க மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எம்.எஸ். தோனி படம் மூலமாக பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் அண்மையில் தற்கொலை செய்துக்கொண்டார். இவரது தற்கொலைக்கு ஹிந்தி சினிமாவில் நிலவும் வாரிசு அரசியலும், சுஷாந்த் சிங்கிடம் இருந்து சிலர் படவாய்ப்புகளை தட்டிப்பறித்ததுமே காரணம் எனக் கூறப்பட்டது.

இதேவேளை    சுஷாந்த் சிங்கின் காதலியான ரியா சக்ரவர்த்தி மற்றும் சிலர் சுஷாந்த் சிங்கிற்கு மன ரீதியாக தொல்லைக் கொடுத்ததாகவும் அவருடைய தந்தை குற்றஞ்சாட்டியிருந்தார்.

இதனை தொடர்ந்து அவருடைய மரண விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.