அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு கவனயீர்ப்பு ஒன்றுகூடல்-சுவிஸ்
தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும் எமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெறுகின்ற தொடர் மக்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்..
"அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு.."
*கவனயீர்ப்பு ஒன்றுகூடல்*
31.08.2020; திங்கள் மாலை 16:00 - 18:30 மணி வரை
Bahnhofplatz, 3011 Bern
இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்பவர்கள் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
கருத்துகள் இல்லை