நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வு!
9 ஆவது நாடாளுமன்ற தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்காக நடைபெறவுள்ள நாடாளுமன்ற விடயங்களை தெளிவுபடுத்தும் செயலமர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகவுள்ளது.
நாடாளுமன்ற கட்டிட தொகுதியில் இடம்பெறவுள்ள இந்த செயலமர்வு நாளை மறுதினம் 26 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. இந்த 2 நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவம் நாளை காலை 9.00 மணிக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறவுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை