இந்திய – சீனாவுக்கு இடையில் ஐந்தாம் சுற்றுப் பேச்சுவார்த்தை!!

லடாக்கின் பாங்காங் ஏரிப் பகுதியிலிருந்து சீன படைகளை முற்றிலும் விலக்கிக்கொள்ள வைப்பது தொடர்பான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை சீனாவின் எல்லைக் கோடு பகுதியான மோல்டோவில் ஆரம்பமாகியுள்ளது.

ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் மரணமடைந்தனர். இதைத்தொடர்ந்து பதற்றத்தை தணிக்க எல்லையில் இரு நாட்டு படைத் தலைவர்கள் அளவிலான நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

இதன்போது இரு தரப்பிலிருந்து கணிசமான படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. இந்தநிலையில், லடாக்கின் பாங்காங் ஏரி கரையான விரல் பகுதியில் சீன படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பாங்காங் ஏரியின் வடக்கு கரை உள்ளங்கை போன்றும் அதன் நீட்சி விரல்கள் போன்றும் காணப்படுவதால் அவற்றை ஒன்று, இரண்டு என எட்டு விரல்களாக பெயரிட்டுள்ளனர்.

இப்பகுதி தற்போது பிரச்சினைக்குரிய பகுதியாக காணப்படுகிறது. இங்கு சீனாவின் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இங்கு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்தது போன்ற மோதல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க 5ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. விரல்கள் பகுதியிலிருந்து சீன படைகளை முழுமையாக விலக்குவதில் இந்திய இராணுவம் இந்த பேச்சுவார்த்தையின்போது கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு லடாக்கில் சீன படைகள் பின்வாங்கலை தாமதப்படுத்துவதால் இருநாடுகளுக்கு இடையேயான இராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.