ஜப்பான் பிரதமர் பதவி விலக தீர்மானம்!!

ஜப்பான் பிரதமர் பதவி விலக தீர்மானம்!!

 ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, தனது உடல்நிலையை கருத்திற் கொண்டு தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.

ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை மருத்துவமனைக்கு சென்றதற்கு பின்னர், அவரது உடல்நலம் குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன.

65 வயதான ஷின்சோ அபே, இன்னும் ஒரு வருடம் பதவியில் இருந்திருக்கலாம். பிரதான ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைவராக இருந்த அவரது பதவிக்காலம், அடுத்த ஆண்டு செப்டம்பரில் முடிவடையவுள்ளது.

நிதி அமைச்சர் டாரோ அசோ, செயல் பிரதமராக பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அபேவின் இராஜினாமா ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சியில்; ஒரு தலைமைப் போட்டியைத் தூண்டிவிடும் என்பது உறுதி.

அபேயின் மருத்துவமனை வருகைகளில் ஒன்று கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நீடித்தது. மேலும் அவர் அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சியால் அவதிப்படுவதாக அறியப்படுகிறது. இது 2007ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த ஒரு வருடத்திற்குப் பிறகு அவரை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கு ஓரளவு காரணமாக இருந்தது.

அபே ஒரு மருத்துவ பிரச்சினை தொடர்பாக இந்த பதவியை விட்டு விலகுவது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக ஒரு வருடம் மட்டுமே பதவியில் இருந்தபின் 2007ஆம் ஆண்டு அவர் பதவி விலகியிருந்தார்.

கீழ் சபையில் ஒரு மகத்தான தேர்தல் வெற்றியின் பின்னர் அவர் 2012ஆம் ஆண்டு மீண்டும் பிரதமாக பதவியேற்றார். ஏழு ஆண்டு பதவிக்காலம் அவரை ஜப்பானின் மிக நீண்ட காலம் தலைவராக முன்னிறுத்தியுள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.