குறிப்பிட்ட சில இடங்களுக்கு விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்!!
சில இடங்களுக்கு தொடர்ச்சியாக விமான சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அறிவித்துள்ளது.
இத்தாலியின் மிலான், இங்கிலாந்தின் லண்டன், ஜப்பானின் டோக்கியோ, மாலைத்தீவின் மலே, ஜேர்மனியின் பிரான்ங்பர்ட், பிரான்ஸின் பரிஸ் மற்றும் அவுஸ்ரேலியாவின் சிட்னி ஆகிய நகரங்களுக்கே இவ்வாறு விமான சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
குறித்த பகுதிகளுக்கு பயணிக்க விரும்புபவர்கள் காலி, கண்டி மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை அலுவலகத்தின் ஊடாக டிக்கெட்டுகளை பதிவு செய்துகொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு 1979 எனும் துரித இலக்கம் அல்லது இணையத்தளம் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்த முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளினதும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை