நீட், ஜே.இ.இ. தேர்வுகளை நடத்துமாறு பிரதமரிடம் கல்வியலாளர்கள் கோரிக்கை!!


 நீட் மற்றும் ஜே.இ.இ. ஆகிய நுழைவுத் தேர்வுகளை மேலும் தாமதிக்கக் கூடாது என 150 கல்வியலாளர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த கல்வியலாளர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த கல்வியலாளர்கள் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்த மேலும் தாமதிப்பது மாணவர்களின் எதிர்காலத்தை விட்டுக்கொடுப்பதாக அமையும் என்பதுடன் சொந்த அரசியல் நோக்கத்துக்காக சிலர் மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட முயல்கின்றனர் என கல்வியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காகவே அரசை எதிர்ப்பதாகவும் இளைஞர்களும் மாணவர்களுமே நாட்டின் எதிர்காலம் என்ற நிலையில் கொரோனா பெருந்தொற்றால் அவர்களின் வருங்காலமும் நிச்சயமற்ற சூழலுக்கு மாறிவிட்டதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், மாணவர்கள் சேர்க்கை குறித்தும் வகுப்புகள் குறித்தும் நிறைய அச்சங்களைக் காண முடிவதாகவும் இவை விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் எனவும் கல்வியலாளர்கள் பிரதமரிடம் கோரியுள்ளனர்.

மருத்துவப் படிப்புக்களில் சேர்வதற்கான அகில இந்திய நுழைவுத் தேர்வான நீட் தேர்வு செப்டம்பர் 13ஆம் திகதியும், பொறியியல் படிப்புகளுக்காக ஜே.இ.இ. தேர்வு செப்டம்பர் ஒன்று முதல் 6ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளன.

ஆனால், கொரோனா நெருக்கடி நாடு முழுவதும் தீவிரமாக அதிகரித்து வருவதால் நுழைவுத் தேர்வுகளை பிற்போட வேண்டும் என மாணவர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர.

எனினும், கொரோனா காலத்திலும் தேர்வுகள் திட்டமிட்ட திகதியில் கண்டிப்பாக நடைபெறும் என நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை நடத்தும் தேசியத் தேர்வுகள் முகாமை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.