இந்தியாவில் ஒரேநாளில் 75,760 பேர் கொரோனாவால் பாதிப்பு!


இந்தியாவில் உச்சக்கட்டமாக இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 75,760 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் தினந்தோறும் காலை 8 மணிக்கு கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில் இன்று வெளியிடப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தகவலின்படி கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 75,760 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 33,10,235 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1023 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த 24 மணி நேரத்தில் 56,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை 25,23,772 பேர் குணமடைந்தள்ளனர். 7,25,991 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 60,472 பேர் உயிரிழந்துள்ளனர்.


நேற்று மட்டும் 9,24,998 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.


இந்தியாவில் குணமடைந்தவர்களின் சதவீதம் 76.24 ஆகவும், உயிரிழந்தவர்களின் சதவீதம் 1.83 ஆகவும், சிகிச்சை பெற்ற வருபவர்களின் சதவீதம் 21.93 ஆகவும் உள்ளது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.