டென்மார்க்கின் இராணுவ புலனாய்வுத் தலைவர் பணி இடைநீக்கம்!

 

டென்மார்க்கின் இராணுவ புலனாய்வுத் தலைவர் லார்ஸ் ஃபைண்ட்சென், சட்டங்களை மீறி உளவுத்துறை கண்காணிப்புக் குழுவை தவறாக வழிநடத்தியது தெரியவந்ததை அடுத்து, அவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய, மேலும் இரண்டு ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டென்மார்க் பாதுகாப்பு புலனாய்வு சேவை, கடந்த ஆறு ஆண்டுகளில் டென்மார்க் குடிமக்கள் மீது உளவு பார்த்ததாக கூறப்படுகிறது.

சட்டத்திற்குப் புறம்பான தவறுகளை உரியவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதற்கு பிறகு, முகவரகம் மீதான விசாரணை தொடங்கப்பட்டது.

உள்ளூர் ஊடகங்களின்படி, ஆயுதப் பணிகளில் உளவு பார்த்ததாக விசாரணை செய்யத் தவறியதாக பாதுகாப்பு புலனாய்வு சேவை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டென்மார்க் குடிமக்கள் பற்றிய தகவல்களைப் பெற்று அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பொது உறுப்பினர்கள் எப்போதாவது அவர்கள் குறிவைக்கப்பட்டார்களா, என்ன தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன என்பது தெளிவாக இல்லை.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.