பிசியோதெரபி சிகிச்சை பெறுகிறார் எஸ்.பி.பி!!

 


பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என கோடிக்கணக்கானோர் தினமும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனது தந்தையின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட் கொடுக்கும் எஸ்பிபி மகன் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன்னர் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தனது தந்தையின் உடல் நிலை இன்றும் சீராக இருப்பதாகவும், ஒரு நல்ல செய்தி என்னவெனில் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல் சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இன்று எனது தந்தையை நான் சந்திக்கவில்லை என்றாலும் அவரது உடல்நிலையை நல்ல முறையில் முன்னேறியிருக்கிறது என்றும், மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதால் அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் தந்தைக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தந்தைக்கு தகுந்த முறையில் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் குழுவினர்களுக்கும் தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.