விரைவில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு உருவாக்கம்!!

 

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நிபுணர் குழு விரைவில் நியமிக்கப்படும் என்று நீதி அமைச்சின் உயர் வட்டாரம் உறுதிப்படுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தை உருவாக்குவதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் சட்ட வரைஞ்ஞர் திணைக்களம் வழங்கியுள்ளதாகவும் இவற்றுடன் இனைத்து மற்ற நிபந்தனைகளுடன் 19 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

சட்ட வரைஞ்ஞர் திணைக்களத்திற்கு மேற்கூறிய பொருத்தமான வழிகாட்டுதல்கள் நீதி அமைச்சர் அலி சப்ரி, கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோரினால் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் என்பது முக்கியமானதொன்று என்றும் நீதி அமைச்சின் உயர் வட்டாரம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.