கும்புறமூலை விபத்தில் இளைஞன் பலி!

மட்டக்களப்பு – கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள கும்புறமூலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவர் படுகாயமுற்றநிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிரான் பிரதேசத்தை சேர்ந்த அருமைத்துரை கிருஷாந் (வயது-21) என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளதுடன் கருவாக்கேணி பிரதேசத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை சிவநேசராஜா (வயது-48) என்பவரே காயமடைந்துள்ளார்.

கும்புறுமூலை பாசிக்குடா வீதியில் நேற்று (22) இரவு ஒன்றன் பின் ஒன்றாக சென்ற மோட்டார் சைக்கிளும் முச்சக்கர வண்டியுமே மோதுண்டு இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். (150)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.